கிருஷ்ணராயபுரம் அருகே அப்துல் கலாம் நினைவுதினம் அனுசரிப்பு

 

கிருஷ்ணராயபுரம், ஜூலை 28: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, கிருஷ்ணராயபுரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணமுத்தாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் அப்துல்கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள், மக்கள் உரிமை சமூக பாதுகாப்பு அமைப்பு, ஏபிஜே அப்துல் கலாம் சமூக சேவை அமைப்பினர், வேல்முருகன், சக்திவேல், குமார், கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே அப்துல் கலாம் நினைவுதினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: