அரியலூர் அண்ணாசிலை அருகே அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், ஜூலை 27: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு உயர் மருத்துவமனைக்கு வழிகாட்டி செவிலியர் காலிபணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த மருத்துவமனைக்கு நிரந்தர செவிலியர்களை பணியமர்த்த வேண்டும். கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்த பட்சம் 8 செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தனசெல்வி, மாவட்ட துணைத் தலைவர் ரேவதி, மாவட்ட இணைச் செயலர் அனிதா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஷேக்தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

The post அரியலூர் அண்ணாசிலை அருகே அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: