மோடியின் ஆதார் விவரங்களை மாற்றிய கல்லூரி மாணவர் கைது

முசாபர்பூர்: உத்தரப் பிரதேசத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் கரிபா கவுன் கிராமத்தை சேர்ந்த அர்பசா துபே என்ற மதன் குமார் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் ஆதார் அட்டைகளில் அவர்களது பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை மாற்றியதுடன், அவற்றை முறைகேடாக பயன்படுத்த முயன்றுள்ளார். அவர் பயன்படுத்திய ஐ.பி. முகவரியை வைத்து உத்தரப் பிரதேசம் வந்த குஜராத் போலீசார் அவரை சதாத்பூர் பகுதியில் கைது செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

The post மோடியின் ஆதார் விவரங்களை மாற்றிய கல்லூரி மாணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: