3.25 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: ஆண்டு தோறும் நடைபெறும் அமர்நாத் பனிலிங்க யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பலத்த பாதுகாப்புடன் 22வது குழு புறப்பட்டு சென்றனர். 2,898 ஆண்கள், 898 பெண்கள், 90 துறவிகள், 12 சிறுவர்கள் உட்பட மொத்தம் 3989 பேர் நேற்று யாத்திரையை தொடங்கினார்கள். இதுவரை சுமார் 3.25லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளார்கள்.

The post 3.25 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: