விருதுநகர், ஜூலை 24: மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தை கண்டித்தும், வன்முறைகளை வேடிக்கை பார்த்து வரும் பாஜ அரசைக் கண்டித்தும் விருதுநகர் அருகே ஆர்ஆர் நகரில் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவராஜ் (தி.மு.க.) தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் லிங்கசாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் அபிராம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சிக்கந்தர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
The post மணிப்பூர் கலவரம் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து கட்சி போராட்டம் appeared first on Dinakaran.