இந்நிலையில் மயிலாடுதுறையில் கடந்த ஜூன் 20ம் தேதி, இரவு 7 மணியளவில் காரில் சிலருடன் வந்த மாரிமுத்து, தாயுடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை கடத்தி சென்றார். இது குறித்து தனலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் உமா மகேஸ்வரி சென்னையில் இருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு, மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், ‘என்னை காரில் கடத்திய மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தார். பின்னர் ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றார். சென்னையில் ஒரு தர்காவுக்கு அழைத்து சென்று பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்து நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உமா மகேஸ்வரியை மயிலாடுதுறை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கணவர் மாரிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
The post திருமணம் செய்து பிரிந்ததால் கணவரால் கடத்தப்பட்ட நகராட்சி பெண் ஊழியர் அறையில் அடைத்து சித்ரவதை: சென்னையில் போலீஸ் மீட்டது appeared first on Dinakaran.