இதுகுறித்து அறிந்த விக்னேஷ், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கடந்த 2021ல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அம்மைநாயக்கனூரை சேர்ந்த விக்னேஷ், குமார், இளையராஜா, மீனாள், சதீஷ்குமார், நந்தினி, சந்திரசேகர், சித்ரசேனன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும், இவ்விவகாரத்தில் திருப்புவனம் பத்திர பதிவு அலுவலகத்தில் துணைப்பதிவாளராக இருந்த ராமச்சந்திரனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். துணைப்பதிவாளர் ராமச்சந்திரன் ஏற்கனவே துறை ரீதியிலான நடவடிக்கையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post நில மோசடியில் பத்திர பதிவு துணைப்பதிவாளர் கைது appeared first on Dinakaran.
