அதன்பின், 2018ல் காங்கிரஸ் கூட்டணி சார்பில், முதல்வரான ம.ஜ.த.,வின் குமாரசாமி ஆட்சியில், முழு திட்ட அறிக்கை தயாரித்து, ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில், அப்பகுதியில் சர்வே பணிகள் மேற்கொள்ள கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. மேகதாதுவில் அணை கட்டும் பட்சத்தில், தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வரத்து குறைந்து, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், தமிழகம் சார்பில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. அணை கட்ட தேவையான வனப்பகுதியை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த 29 வனத்துறை அதிகாரிகள் நியமனம் செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட சுமார் 13,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கான நிலம் வனப்பகுதிக்குள் வருவதால் தற்போது வரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை. மரங்கள், வன விலங்குகளுக்கு பாதிப்பின்றி திட்டத்தை செயல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.
The post தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!! appeared first on Dinakaran.