நூலக விழிப்புணர்வு ஊர்வலம்

 

திருப்புவனம், ஜூலை 22: திருப்புவனத்தில் முழு நேர நூலகம் சார்பில் நூலக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் திருப்புவனம் புதூர் ஊராட்சி ஒன்றிய தெற்குப்பள்ளி மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். தெற்கு பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கிளை நூலகத்தை அடைந்தது. நூலக விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை நூலகர் சரவணன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தமிழாசிரியர் தெய்வேந்திரன், ஓவிய ஆசிரியர் அருள், லதா,அஜித்குமார் மற்றும் நூலக வாசகர்கள் பங்கேற்றனர்.

The post நூலக விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: