பின்னர் நடிகையை துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அதிர்ச்சியடைந்த நடிகை, நண்பரின் பிடியில் இருந்து தப்பி வெளியே வந்தார். நடந்த சம்பவத்தை போலீசாரிடம் புகாராக அளித்தார். இதுகுறித்து போலீஸ் உதவி ஆணையர் (குற்றம்) வருண் தஹியா கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட போஸ்புரி நடிகை, தனது இன்ஸ்டாகிராம் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நேர்காணல் பேட்டி எடுப்பதாக கூறி, அவரை அழைத்து வந்த நண்பரே அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நண்பரின் பெயர் மகேஷ் பாண்டே என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக அவர் மீதும், அவரது நண்பர்கள் மீதும் கொலை மிரட்டல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது’ என்றார்.
The post நேர்காணல் பேட்டி எடுப்பதாக கூறி ஓட்டலில் போஜ்புரி நடிகை பலாத்காரம்: இன்ஸ்டாகிராம் நண்பர் தலைமறைவு appeared first on Dinakaran.