இதனை தொடர்ந்து 4 சிறுவர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நீதிமன்றமானது உத்தரவிட்டது. இந்த பரிசோதனையின் போது குழந்தைகள் நல அலுவலர்கள், சிபிசிஐடி போலீசார், குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்தது.
அதன்படி இன்று 4 சிறுவர்களும் தங்களது பெற்றோறுடன் ஆஜராகியுள்ளனர். டிஎன்ஏ பரிசோதனைகாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்திற்கு தற்போது வந்துள்ளனர். அவர்களுடன் சிபிசிஐடி போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழு அதிகாரிகளும் உடன் உள்ளனர்.
The post புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் டிஎன்ஏ பரிசோதனைக்காக 4 சிறுவர்கள் ஆஜர் appeared first on Dinakaran.