பின் அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உரையாடினார். இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது 2 நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இலங்கை அதிபரை சந்திக்கும் போது கச்சத்தீவை மீட்பது மற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். 2 நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வரும் நிலையில், இலங்கை அதிபரின் இந்த வருகையால் அந்த உறவு மேலும் வலுவடையும் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post டெல்லியில் ரணில் விக்கிரமசிங்கே .. குடியரசு தலைவர், பிரதமர் மோடியை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.