ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்: அதிமுக பொருளாளர் சூளுரை

திண்டுக்கல்: தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். திண்டுக்கல் நாகல் நகரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டனர். அப்போது பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்’’ என பேசினார். இந்தப் பேச்சைக் கேட்டு அருகில் இருந்த கட்சிக்காரர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். உடனடியாக, அவரிடம் எடுத்து சொல்லவே, பின்னர் மீண்டும் சுதாரித்து கொண்டு, ‘‘அய்யய்யோ… நான் மாற்றி சொல்லி விட்டேன். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம். வார்த்தை வேகத்தில் தவறாகச் சொல்லி விட்டேன்’’ என கூறினார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்த குளறுபடி பேச்சைக் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் சிரிப்பலையில் மூழ்கினர்.

The post ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்: அதிமுக பொருளாளர் சூளுரை appeared first on Dinakaran.

Related Stories: