இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 மற்றும் அதற்கு மேல் விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற கடைப் ஊழியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மேற்காணும் அறிவுறுத்தலின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்திட அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தாங்களும் பொறுப்பேற்க நேரிடும்.
The post கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.