சந்திரயானின் வெற்றி மனிதகுலத்துக்கு நல்லது: பிரதமர் மோடி டிவிட்

புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலத்தின் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து திட்டமிட்டபடி, கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது குறித்து பூட்டான் பிரதமர் அவரது டிவிட்டரில், ‘’சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் பிரதமர் மோடியுடன் இணைந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இது இந்தியா தொலைநோக்கு பார்வை, அறிவியல் அர்ப்பணிப்பு மற்றும் எல்லைகளைக் கடந்து கற்கும் ஆர்வம் தெளிவாக தெரிகிறது,’’ என்று பாராட்டியுள்ளார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘’உங்களது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில், சந்திரயானின் வெற்றி மனிதகுலம் முழுவதற்குமாக நல்லது,’’ என்று கூறியுள்ளார்.

The post சந்திரயானின் வெற்றி மனிதகுலத்துக்கு நல்லது: பிரதமர் மோடி டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: