பழைய ஜெயங்கொண்டபுரத்தில் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

கிருஷ்ணராயபுரம், ஜூலை 16: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மூலவர், அம்பாளுக்கு மற்றும் நந்தி பெருமாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திரவியங்கள், பழங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட நந்தி பெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பழைய ஜெயங்கொண்டபுரத்தில் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: