கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

 

கந்தர்வகோட்டை,ஜூலை 15: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் யாசின் சித்திகா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும், முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து பள்ளி வளர்ச்சியில் பங்கு கொள்ள செய்ய வேண்டும் எனவும், நான்காம், ஐந்தாம் வகுப்பு, மாணவ மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்க வேண்டும் எனவும் ஆலோசனை செய்யப்பட்டது. பள்ளி வளாகத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: