கலவரத்தில் சிறுபான்மையினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கடினமான சவால்களை கடந்து வரவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு விஷயத்தில் தலையிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் இது காலனி ஆதிக்கம் மன நிலையை பிரதிபலிக்கிறது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக நீதித்துறை உட்பட பல துறைகள் கண்காணித்து நிலைமையை கட்டுக்குள் வைத்து இருப்பதாகவும் இதில் தலையிடுவதற்கு பதிலாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தங்கள் சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்தலாம் என்றும் ஒன்றிய அரசு கண்டித்துள்ளது.
The post மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்.. உள்நாட்டு விஷயங்களில் தலையிட வேண்டாம் என ஒன்றிய அரசு கண்டனம்!! appeared first on Dinakaran.