சென்னையில் திருட்டு வழக்கில் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று வந்த ரவுடி ஸ்ரீதர் மர்மச்சாவு

சென்னை: சென்னையில் திருட்டு வழக்கில் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று வந்த ரவுடி ஸ்ரீதர் மர்மமாக உயிரிழந்துள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக எம்ஜிஆர் நகர் போலீசார் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்காக தனது மனைவி மஞ்சுவுடன் ஸ்ரீதர் இன்று மதியம் எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் வந்துள்ளார்.காவல்நிலையத்தில் இருந்தபோது நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக கூறி, கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ஸ்ரீதர் உயிரிழந்தார்; இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னையில் திருட்டு வழக்கில் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று வந்த ரவுடி ஸ்ரீதர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Related Stories: