வேன் கவிழ்ந்து 30 பேர் காயம்

 

திருச்சுழி, ஜூலை 11: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் அ.முக்குளம் பகுதியிலிருந்து மதுரை மாவட்டம் வலையங்குளம் அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக தினந்தோறும் பெண் தொழிலாளர்களை ஏற்றிச்செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல தனியார் நிறுவன வேன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் வந்தது.

அப்போது கட்டுபாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

The post வேன் கவிழ்ந்து 30 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: