விசாரணையில், அவர் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ்(29) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது. பின்னர், வாழப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். வெங்கடேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வெங்கடேசுக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில், இதுவரை 65க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். திருட்டு சம்பவத்தின்போது வெங்கடேஷ் தனது உருவத்தை மாற்றி, திருநங்கை வேடத்தில் கைவரிசை காட்டுவது வழக்கம். திருடப்பட்ட நகைகளை வெவ்வேறு மாவட்டங்களில், தனது மனைவி மற்றும் தங்கை பெயரில் அடகு வைத்துள்ளார். நடுவலூர் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருடிய நகையில் 4.5 பவுன் நகையை, பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்திற்கு அடகு வைத்து, கடந்த ஒரு வார காலமாக ஜாலியாக செலவு செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தான் வெளியே வந்துள்ளார்’ என்றனர்.
The post 9 மாவட்டங்களை கலக்கிய பிரபல திருடன் கைது: திருநங்கை வேடமிட்டு கைவரிசை காட்டியது அம்பலம் appeared first on Dinakaran.