இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்றிரவு முதல் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் பைக்கில் வந்ததாக தெரிகிறது. எனவே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் வசித்து வரும் ஐயப்பன் எம்எல்ஏ வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே மஞ்சள் நீராட்டுவிழா நடந்த மண்டபத்தில் பாப்கார்ன் விற்பனை செய்த இடத்தின் அருகே மண்ணெண்ணெய் குண்டு விழுந்ததால் விழுப்புரத்தை சேர்ந்த பாப்கார்ன் வியாபாரிகள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post எம்எல்ஏ விழாவில் குண்டு வீச்சு 2 பேரை பிடித்து தனிப்படை விசாரணை appeared first on Dinakaran.