சேலம்: ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்

சேலம்: சேலம் அம்மாபேட்டையில் ரவுடி சபீர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் சிக்கின. ரவுடி வீட்டில் கஞ்சா உள்ளதா என்று சோதனை செய்ய போலீசார் சென்றபோது செல்லாத ரூபாய் நோட்டுகள் சிக்கின. ரவுடி சபீர் தனது வீட்டில் ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்தது அம்பலமாகியுள்ளது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

The post சேலம்: ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: