ஊராட்சி பள்ளி கட்டிடம் திறப்பு

 

சிங்கம்புணரி, ஜூலை 10: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஆசா அஜித் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் மீனாட்சி மிஷன் நிறுவனர் டாக்டர் சேதுராமன் டாக்டர் குரு சங்கர் மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார், தொடக்கக் கல்வி துணை இயக்குனர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ், சத்யன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், அவைத்தலைவர் அந்தோணி, ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ஊராட்சி பள்ளி கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: