விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்:பட்டுக்கோட்டை நகைக்கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்க்கு காரணமான திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வா ளர் உமாசங்கரி மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பதவி நீக்கம் செய்திட வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ரயில்நிலையம் முன்பாக விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம், தொழிற்சங்க பேரவை ஆபரண தொழிலாளர் சங்கம், நகை வியாபாரிகள் சம்மேளனம் மற்றும் திருவாரூர்மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் ஏகநரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, எம்.எல்.ஏ மாரிமுத்து, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க கிழக்கு மண்டல தலைவர் சேகர் , மாநில துணைத்தலைவர் குன்னம்நாகராஜ், திருவாரூர் ஆபரண தொழிலாளர் சங்க நகர தலைவர் தியாகராஜன், செயலாளர் அம்பிகாசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: