இதனால் சந்தேகமடைந்த நாராயணன், மலப்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்து உள்ளனர். அப்போது 4 பேரும் இறந்த நிலையில் காணப்பட்டனர். சபீஷும், ஷீனாவும் படுக்கை அறைகளில் தூக்கு போட்டு இறந்த நிலையிலும், குழந்தைகள் 2 பேரும் படுக்கையில் இறந்த நிலையிலும் காணப்பட்டனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.
The post கேரளாவில் 2 குழந்தைகளை கொன்று வங்கி பெண் மானேஜர் கணவருடன் தற்கொலை appeared first on Dinakaran.