இறுதியில், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2,14,540 பணம் சிக்கியது. இதற்கான வரவு குறித்தும், அதற்கான ரசீதுகள் குறித்தும் உதவி செயற் பொறியாளர் எஸ்.பாஸ்கரன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கணக்கில் வராத ரூ.2.14 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கணக்கில் வராத பணம் குறித்து முறையாக விசாரணை நடத்த உதவி செயற் பொறியாளர் எஸ்.பாஸ்கரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை முடிவில் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீர்வளத்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.14 லட்சத்தை பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post உரிமம் புதுப்பிக்க ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ.2.14 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை appeared first on Dinakaran.