கிளை மேலாளர், ஊழியர் இடையே மோதல்

அந்தியூர், ஜூலை 6: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே நகலூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (59). இவர் அந்தியூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் வசூல் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர் துரையன் என்பவரும் விடுமுறை கேட்க அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கிளை மேலாளராக பணிபுரிந்து கொண்டு பணிமனைக்கு எதிரே வசிக்கும் சக்திவேலுவுக்கு போன் செய்துள்ளனர். போன் எடுக்காததால் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் இருவரும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதில் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் கிளை மேலாளர் மீது தகாத வார்த்தையால் பேசி, உதைத்ததாக இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிளை மேலாளர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கிளை மேலாளர், ஊழியர் இடையே மோதல் appeared first on Dinakaran.

Related Stories: