ஊராட்சி தலைவரின் மகளை தாக்கிய வாலிபர் கைது

 

கமுதி, ஜூலை 6: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஓ.கரிசல்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர்ராஜாமணி. இவரது மகள் செல்வமேரி(45). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது முன்பகை காரணமாக முருகன்(42), இளஞ்செழியன்(19), முத்துராம லிங்கம்(33), காளீஸ்வரி(40) ஆகியோர் வாக்குவாதம் செய்து, அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக செல்வமேரி கோவிலாங்குளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

The post ஊராட்சி தலைவரின் மகளை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: