ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்கின்றனர், ஒரே சுடுகாடு இருக்கிறதா? ஒரே குளம், ஒரே கோயில் இருக்கிறதா? கோயிலுக்குள் நாட்டின் ஜனாதிபதியை உள்ளே விட மறுக்கின்றனர். இதெல்லாம் இந்த சட்டத்தால் மாறும் என ஒரு மாதிரியை காட்டுங்கள். பிறகு விவாதிப்போம். வெளிநாட்டில் இதெல்லாம் இருப்பதாக கூறினால், வெளிநாடுகளை போன்று தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக கொடுப்பீர்களா? இருக்கும் நிலையிலேயே பல மாற்றங்களை செய்ய முடியும் எனும்போது, சட்டத் திருத்தத்தால் ஏன் செய்ய வேண்டும்? மணிப்பூரில் முதல்வருக்கும், பிரதமருக்கும் தெரியாமல் கலவரம் நடக்க வாய்ப்பில்லை. என்னிடம் நாட்டைக் கொடுங்க.. அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துவேன். இவ்வாறு கூறினார்.
The post என்னிடம் நாட்டை கொடுங்க… மணிப்பூர்ல நடக்கிற கலவரத்தை அரை மணி நேரத்தில நிறுத்துறேன்: சீமான் லகலக appeared first on Dinakaran.