சாதாரண மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். சில நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மீது பிரதமர் நரேந்திர மோடி ஊழல் புகார் கூறினார். அவர்களையே இன்று அமைச்சர்கள் ஆக்கியுள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பிரதமர் நாட்டைத்தான் பிரதிநிதிப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அரசியல் கட்சியை அல்ல. அஜித் பவார் மக்களை முட்டாள் ஆக்குகிறார். அவர் முறையான வழிகளை பின்பற்றமாட்டார். பாரதிய ஜனதாவுடன் சேர்ந்தவர்களுக்கு எதிர்காலம் இல்லை. மக்களை பிளவுபடுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது.
The post இந்தியாவில் ஜனநாயகம் இல்லை: சரத்பவார் காட்டம் appeared first on Dinakaran.