இதில், ஆந்திராவை சேர்ந்த கொல்லி ஜெகநாதன் (53), நக்கிலா சட்யம் (48), ரப்பாகா கண்னையா (49) மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த பிஸ் கோஸ் (43) ஆகிய 4 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்குவங்கத்தை சேர்ந்த வருன் கோஸ் (44) மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குனியமுத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட வருன் கோஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஒப்பந்ததாரர் சீனிவாசன் , திட்ட மேலாளர் சாதிக் குல் அமீர், பொறியாளர் அருணாச்சலம் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post கோவையில் கல்லூரி சுவர் இடிந்து விழுந்து 5 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.