தமிழ்நாட்டில் சில ரசிகர்கள் டான்ஸிங் ரோஸ் என்று செல்லப் பெயர் வைத்து சமூக வலைதளங்களில் கொண்டாடினர். அந்த அளவிற்கு எமிலியானோ மார்ட்டினஸ் இந்தியாவில் பிரபலமான வீரராக அறியப்பட்டார். இந்த நிலையில் கால்பந்து ஜாம்பவான்களான மரடோனா, பீலே உள்ளிட்ட வீரர்கள் வந்த மேற்குவங்க மாநிலத்திற்கே எமிலியானோ மார்ட்டினசும் வந்துள்ளார். கொல்கத்தாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மார்ட்டினஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக இந்தியாவில் இயங்கி வரும் மோஹன் பகான் கால்பந்து அணியை சந்திப்பதற்காக அவர் கொல்கத்தா வந்துள்ளார்.
அந்த அணியின் சொந்த மைதானமாக கருதப்படும் சால்ட் லேக் மைதானத்தில் மோகன் பகான் கிளப் தரப்பில் பீலே, மரடோனா மற்றும் கார்பீல்ட் சோபர்ஸ் ஆகியோரின் பெயர்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வாயில்களை திறந்து வைக்கவுள்ளார். அப்போது அவர் மோகன் பகான் அணியின் உறுப்பினர்கள் சிலரை சந்திக்கிறார். அதோடு அந்த கிளப் அணியின் உட்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிடுகிறார். முன்னதாக குழந்தைகளுடனான உரையாடல் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். இந்தியா வந்தது குறித்து எமிலியானோ மார்ட்டினஸ் கூறுகையில், இந்தியா வந்திருப்பது சிறந்த உணர்வை கொடுக்கிறது. இந்தியா வருவது என் கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது. இந்தியா வருவதாக வாக்கு கொடுத்திருந்தேன். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
The post இந்தியா வந்திருப்பது சிறந்த உணர்வை கொடுக்கிறது: அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ மார்ட்டினஸ் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.