வானதி சீனிவாசன் எம்எல்ஏ மீது திமுகவினர் போலீசில் புகார்

கோவை: திமுக கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது வக்கீல் சரவணன் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேற்று புகார் அளித்தனர். அதில், ‘‘கோவை வி.கே.கே. மேனன் சாலையில் பாஜ சார்பில் கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுக கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக கட்சி பற்றி அவதூறாக பேசியுள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

The post வானதி சீனிவாசன் எம்எல்ஏ மீது திமுகவினர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: