காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில் ரூ.1.57 கோடியில் திட்டப்பணிகள்: எம்பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் கோனேரிக்குப்பம், திம்மசமுத்திரம், தாமல் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் துவக்கிவைத்தனர். காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிக்குப்பம், திம்மசமுத்திரம், தாமல், முத்துவேடு, சிறுனைபெருக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையம், தார்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிக்குப்பம், தாமல், முத்துவேடு, திம்மசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் ரூ.1.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் எம்பி க.செவ்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் அங்கன்வாடி மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து காரப்பேட்டை சாலை பணி, திம்மசமுத்திரம், திருப்புக்குழி பகுதிகளில் கால்நடை கட்டிடப்பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்வில், ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா இளமது, ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில் ரூ.1.57 கோடியில் திட்டப்பணிகள்: எம்பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: