துறையூர் பகுதி சிவன் கோயில்களில் சனிபிரதோஷ வழிபாடு

துறையூர், ஜூலை 2: துறையூர் நந்திகேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் நல்லியம்பாளையம், சிங்களாந்தபுரம், பகளவாடி சத்திரம் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

துறையூரில் உள்ள நந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், கரும்புச்சாறு, பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. நந்திகேஸ்வரருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post துறையூர் பகுதி சிவன் கோயில்களில் சனிபிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: