சிவகங்கை திருப்புவனம் ஆதி கோரக்கநாதர் சாமி கோயில் குடமுழுக்கு பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: சிவகங்கை திருப்புவனம் ஆதி கோரக்கநாதர் சாமி கோயில் குடமுழுக்கு பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் ஆதி கோரக்கநாதர் சாமி கோயிலில் குடமுழுக்கு பணிகளுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆதி கோரக்கநாதர் கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது. தற்போது கும்பாபிஷேகம் என்ற பெயரில் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். கோயிலில் எந்தப் பணிகளும் நடைபெறக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை அடுத்தமாதம் ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது.

The post சிவகங்கை திருப்புவனம் ஆதி கோரக்கநாதர் சாமி கோயில் குடமுழுக்கு பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Related Stories: