கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28ம் தேதி திருமணம் நடந்தது. தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினரும், நார்வேயில் இருந்து வந்திருந்த மணமகள் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து சிவானந்தினி கூறுகையில், ‘நார்வே தான் பிறந்தேன், வளர்ந்தேன். பாதி தமிழ், பாதி நார்வேஜியன். தமிழ் கலாசாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் புருஷன் கிடைக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. தற்போது கனவு நனவாகியுள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது’ என்றார்.
The post கடலூர் இளைஞரை மணந்த நார்வே பெண் தமிழ் புருஷன் கிடைக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை!: கடல் கடந்த காதலிலும் தாய்மொழி பாசம் appeared first on Dinakaran.