2012ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டிஐஜியாகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் -ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016ம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராகவும், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு (வடக்கு) பணியாற்றியுள்ளார். 2021ம் ஆண்டு இரண்டாவது முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றியுள்ளார். 2022ம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.
காவல்துறையின் பல முக்கிய பதவிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ள இவர், தனது பணிக்காலத்தில் பெரும் பகுதியை சட்டம் மற்றும் ஒழுங்கு பதவிகளில் பணியாற்றியுள்ளார். ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். சிபிசிஐடியில் பணியாற்றியபோது பனையூரில் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிலதிபர் ஒருவர் கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்தபோது பொதுமக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அடையாறு போலீஸ் விசாரணையின்போது அவர் மரணமடைந்தார். இந்த இரு வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அருண் பணியாற்றி உண்மையை கண்டறிந்தார். திருப்பூர் எஸ்பியாக பணியாற்றியபோது பாசி என்ற பல நூறு மோசடி வழக்குகளை விசாரித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு என்பதை கண்டறிந்து, நேர்மையாக வழக்கை நடத்தினார். பல்வேறு முக்கிய வழக்குகளில் துப்பு துலக்கியதோடு, சட்டம் -ஒழுங்கை நிலை நாட்டுவதில் திறமை பெற்றவர், தற்போது, தமிழ்நாடு காவல்துறை சட்டம் (ம) ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்.
The post தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் பதவியேற்பு appeared first on Dinakaran.