தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் விமானம் ஜூலை 15ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு நமது நாட்டைச் சேர்ந்த 20 ஹாஜிகள் மரணமடைந்துள்ளனர். இதில் ஒரே ஒரு பெண் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.அவர் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். கொரோனா இடைவேளைக்குப் பிறகு இந்த ஆண்டு மட்டுமே ஹஜ் பயணம் முழுமையாக நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மதுரையில் இருந்தும் ஒரு சில விமானங்களை இயக்கம மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. எனவே மதுரை மாநகரை சுற்றியுள்ள மக்கள் மற்றும் தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான சிறப்பான வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post வருகின்ற ஆண்டு முதல் மதுரையில் இருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.