லால்குடி, ஜூன் 28: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி லால்குடியில் மதிமுகவினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தை மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி லால்குடி ரவுண்டானாவில் மதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். மதிமுக ஆலோசனைக் குழு உறுப்பினர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி வரவேற்றார். திமுக நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், தங்கப்பழம், சசிகுமார், நகர செயலாளர் பாஸ்கர் மாவட்ட பொருளாளர் துரையரசன், துணை செயலாளர்மேரி ஜாக்லின் விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி பொறுப்பாளர் மரிய கமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறுபாண்மை பிரிவு செயலாளர் தங்கராஜ், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மதிமுக மாநில துணை பொது செயலாளர் டாக்டர் ரொக்கையா, மாநகர் மாவட்ட செயலாளர் சோமு, வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் எஸ்டிபிஐ அப்துல் கவுசர், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வட்டார தலைவர் சுப்பிரமணியன், சுகுமார், மற்றும் தமிழரசன் மற்றும் சாந்தி நகர் ஜமாத் செயலாளர் அப்துல் காதர், மனித நேய மக்கள் கட்சி முன்னாள் தலைவர் சபியுல்லா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ரஜினி மற்றும் கூட்டுறவு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதிமுக மாவட்ட துணை செயலாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
The post ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி லால்குடியில் மதிமுக கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.