கனமழை எதிரொலி: இமாச்சலில் நிலச்சரிவு, சண்டிகர்- மணாலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக இமாச்சலில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகர்-மணாலி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் சில தினங்களாக கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் சண்டிகர்-மனாலி நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பயணிகள் மண்டியில் உள்ள ஆட் அருகே சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கனமழை எதிரொலி: இமாச்சலில் நிலச்சரிவு, சண்டிகர்- மணாலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: