அப்போது மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீட்டில் வீசினர். சத்தம் கேட்டு பஞ்சவர்ணமும், அவரது மகளும் வந்து பார்த்தபோது, ஜன்னல் கதவுகள் தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி ஜெய்சங்கருக்கு தகவல் கொடுத்தனர். அவர் பந்தல்குடி போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். புகாரில், கடந்த ஊராட்சி தேர்தலில், அதே ஊரைச் சேர்ந்த தாமரைச்செல்வம் என்பவருக்கும், தனக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, அவர் மீது சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post ஊராட்சி தலைவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.