சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தடையங்களை சேகரித்துள்ள போலீசார் 8 தனிப்படை அமைத்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக விவசாய கொட்டகைகளுக்கு தீ வைப்பது பம்பு செட்டுகளை சேதப்படுத்துவது, டிராக்டர்களுக்கு தீ வைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
The post நாமக்கல் அருகே 1,500-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை appeared first on Dinakaran.