கழுமலைநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் உள்ள நடராஜர் உடனுரை பெரியநாயகி அம்பாளுக்கும் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், இளநீர், பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் நடராஜர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

The post கழுமலைநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: