கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 5 வரை இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். மீன்பிடி தடைகாலம் நீங்கிய பின் தொழிலுக்கு சென்ற முதல் வாரம் முடிவதற்குள், 2வது முறையாக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்தும், 5 மீனவர்கள் மற்றும் படகை உடனே விடுவிக்க கோரியும், மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
The post இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஸ்டிரைக்: 300 விசைப்படகுகள் கரை நிறுத்தம் appeared first on Dinakaran.