போதை பொருள் விழிப்புணர்வு

 

மதுரை, ஜூன் 24: மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு, குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூக பணியாளர் அருள்குமார் முன்னிலை வகித்து போதை பொருட்களில் இருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆலோசனைகள் வழங்கினார். முதுகலை சமூகப்பிரிவு மாணவிகள் காவ்யா, மெர்சி ஆகியோர் போதை பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் ஆபத்துகளை மாணவர்களுக்கு விளக்கினர்.

The post போதை பொருள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: