இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென வீசிய பலத்த காற்றில் பூக்கடைக்காரர் ஒருவர் நிழலுக்காக வைத்திருந்த பெரிய ராட்சத குடை ஒன்று எதிர்பாராதவிதமாக காற்றில் பறந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தடுமாறி வாகனத்தை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தினர். ஆனால் குடை தொடர்ந்து பறந்து சென்றது. அப்போது பூ கடையின் பெண் உரிமையாளர் சாலையின் குறுக்கே ஓடி சென்று குடையை பிடித்து நிறுத்தினார். ஆனாலும் காற்று வீசியதால் அங்குள்ள சென்டர் மீடியன் வரை சென்றது. பின்னர் அந்த பெண் போராடி குடையை மடித்து எடுத்து சென்றார். அனுமதியின்றி முக்கிய சாலையோரம் சந்தை போல் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
The post பள்ளிக்கரணையில் பரபரப்பு காற்றில் பறந்த ராட்சத குடை: வாகன ஓட்டிகள் பீதி appeared first on Dinakaran.