திருவில்லி தாலுகா அலுவலகம்முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 22: பட்டா வழங்க மறுப்பதாக கூறி, திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், தென்காசி முன்னாள் எம்பி லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் பலவேசம் தலைமை வகித்தார். நகர செயலாளர் மூர்த்தி, நிர்வாகி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post திருவில்லி தாலுகா அலுவலகம்முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: