தச்சுதொழிலாளி சாவு

 

தேனி, ஜூன் 16: தேனி காந்திநகரைச் சேர்ந்தவர் பவுன் மகன் மாரிமுத்து (43) தச்சுதொழிலாளி. குடிக்கு அடிமையான இவரை, மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், பெற்றோருடன் வசித்து வந்தார். தாயார் ஜானகியிடம் செலவுக்கு ரூ.500 வாங்கிக் கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், தேனி நகர் நேரு சிலை பகுதியில் உள்ள ஒரு கடை வாசலில் மாரிமுத்து இறந்து கிடந்தார். இதுபற்றி தகவலறிந்ததும் தேனி போலீசார் மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post தச்சுதொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: